இலங்கையில் தணியாத “ரோணு” சூறாவளி…! அடை மழை பெய்யும் அபாயம்…! தொடரும் எச்சரிக்கை
‘ரோணு’ சூறாவளியால் இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் இன்று பலத்த காற்றுடன் கூடிய அடைமழை பெய்யும் அபாயம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இலங்கையின் வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ அவ்வப்போது பெய்யும் அறிகுறி உள்ளது.
அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டைமாவட்டங்களிலும் ஏனைய சிலபிராந்தியங்களிலும் பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என சுட்டிக்காட்டும் கால நிலை அவதான நிலையம் மின்னலினால் ஏற்படும் இழப்புக்களை குறைப்பதற்காக பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.