<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Puthir.com</title>
	<atom:link href="http://puthir.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://puthir.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 02 Feb 2012 12:03:22 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>கருக்குழந்தைக்கு ஆபத்தாகும் அழகு சாதனப் பொருட்கள் – எச்சரிக்கை தகவல்</title>
		<link>http://puthir.com/2012/02/453.html</link>
		<comments>http://puthir.com/2012/02/453.html#comments</comments>
		<pubDate>Thu, 02 Feb 2012 12:03:22 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[பெண்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=453</guid>
		<description><![CDATA[கருவுற்றிருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அழகு சாதனங்களில் உள்ள ரசாயனங்களினால் கருக்குழந்தைக்கு புற்றுநோய் கூட ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆபத்தான அழகுசாதனங்கள் இன்றைய நாகரீக உலகத்தில் அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்காத பெண்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நெயில் பாலீஸ் முதல் லிப்ஸ்டிக் வரை எண்ணற்ற பொருட்கள் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-454" title="01-pregnancy-2-300" src="http://puthir.com/wp-content/uploads/2012/02/01-pregnancy-2-300.jpg" alt="" width="300" height="225" />கருவுற்றிருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அழகு சாதனங்களில் உள்ள ரசாயனங்களினால் கருக்குழந்தைக்கு புற்றுநோய் கூட ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.<span id="more-453"></span></p>
<p><strong>ஆபத்தான அழகுசாதனங்கள்</strong></p>
<p>இன்றைய நாகரீக உலகத்தில் அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்காத பெண்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நெயில் பாலீஸ் முதல் லிப்ஸ்டிக் வரை எண்ணற்ற பொருட்கள் சந்தையில் குவிந்து கூவி கூவி விற்பனை செய்யப்படுகின்றன. இளம் மங்கைகள் மட்டுமல்லாது, கர்ப்பிணிப் பெண்களும் இன்றைக்கு அழகு சாதனங்களை உபயோகித்து வருகின்றனர்.</p>
<p>அலுவலகத்திற்கு செல்லும் போதும், விருந்து உள்ளிட்டவைகளுக்கு செல்லும் போதும் எண்ணற்ற பொருட்களை உபயோகிக்க நேரிடுகிறது. இது கருக் குழந்தையை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். “தாயின் அத்தியாவசியத் தேவை “ என விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி உபயோகிக்கும் தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய் என்பதை இந்த ஆய்வு வருத்தத்துடன் சொல்கிறது.</p>
<p>ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர். கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால் அந்தக் குழந்தைக்கு பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பது தெரியவந்தது. தாய் உபயோகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் மூலம் குழந்தைக்கு இந்த தீங்கு ஏற்படுகிறது.</p>
<p><strong>ஹார்மோன் பிரச்சினை</strong></p>
<p>எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.</p>
<p><strong>இனப்பெருக்க வளர்ச்சி பாதிப்பு</strong></p>
<p>டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்கு பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் என்பவர்.</p>
<p><strong>புற்றுநோய் பாதிப்பு</strong></p>
<p>கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>
<p>அதனால்தான் கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்கள் மருதாணி வைத்தால் கூட,அது கருக் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது என்றும், பவுடர் போடவும் கூட தடை விதிக்கின்றனர் கிராமத்து பாட்டிகள்.</p>
<p>பாட்டி வைத்தியம், பாட்டி வைத்தியம்தான்&#8230;!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/02/453.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!</title>
		<link>http://puthir.com/2012/02/450.html</link>
		<comments>http://puthir.com/2012/02/450.html#comments</comments>
		<pubDate>Thu, 02 Feb 2012 12:00:33 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=450</guid>
		<description><![CDATA[எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம். டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது. காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுதான். ஆனால் டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-451" title="21-happy-women300" src="http://puthir.com/wp-content/uploads/2012/02/21-happy-women300.jpg" alt="" width="300" height="225" />எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம். <span id="more-450"></span>டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது. காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுதான். ஆனால் டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன்தான் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.</p>
<p><strong>பியூட்டி ப்ரெஸ் யாருக்கு?</strong></p>
<p>இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். 500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், தினமும் அவர்கள் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.</p>
<p>ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாகஇருப்பவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் `ப்ரெஷ்&#8221; ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.</p>
<p><strong>அழகிற்கும் மனதிற்கும் தொடர்பு</strong></p>
<p>அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்&#8221; என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் நம் முன்னோர்கள் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் முதுமை நம்மை அண்டாது என்று தெரிவித்துள்ளனர்.</p>
<p>என்ன டென்சன் பார்ட்டிகளே நடப்பது நடந்துதான் தீரும். எனவே உங்கள் டென்சனை தூக்கிப்போடுங்கள் அழகாக மாறுங்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/02/450.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சரியா தூங்கலையா?.. இதய நோய் தாக்கும் ஜாக்கிரதை!</title>
		<link>http://puthir.com/2012/02/445.html</link>
		<comments>http://puthir.com/2012/02/445.html#comments</comments>
		<pubDate>Thu, 02 Feb 2012 11:54:17 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[குழந்தை வளர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=445</guid>
		<description><![CDATA[குழந்தைகளும், டீன் ஏஜ் வயது சிறுவர்களும் சரியாக தூங்காமல் இருந்தால் அவர்களை கட்டாயப்படுத்தியாவது தூங்க வைக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நள்ளிரவு வரை தூங்காமல் தொலைக்காட்சி பார்ப்பதும், கனிணியில் விளையாடுவதும் சிறுவர்களின் இதயத்தைப் பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இன்றைக்கு 24 மணி நேரமும் தொலைக்காட்சியில் ஏதாவது நிகழ்ச்சியைப் போட்டு குழந்தைகளையும், டீன் ஏஜ் வயதினரையும் கொட்ட கொட்ட விழிக்க வைக்கின்றனர் தூங்காமல் இருக்க &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-446" title="31-sleeping-disorder-300" src="http://puthir.com/wp-content/uploads/2012/02/31-sleeping-disorder-300.jpg" alt="" width="300" height="225" />குழந்தைகளும், டீன் ஏஜ் வயது சிறுவர்களும் சரியாக தூங்காமல் இருந்தால் அவர்களை கட்டாயப்படுத்தியாவது தூங்க வைக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நள்ளிரவு வரை தூங்காமல் தொலைக்காட்சி பார்ப்பதும், கனிணியில் விளையாடுவதும் சிறுவர்களின் இதயத்தைப் பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.<span id="more-445"></span></p>
<p>இன்றைக்கு 24 மணி நேரமும் தொலைக்காட்சியில் ஏதாவது நிகழ்ச்சியைப் போட்டு குழந்தைகளையும், டீன் ஏஜ் வயதினரையும் கொட்ட கொட்ட விழிக்க வைக்கின்றனர் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் பேசுவதும் என இன்றைய இளம் வயதினரின் தூக்கத்தைக் கெடுக்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன. இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.</p>
<p>உயர் ரத்த அழுத்த நோய்</p>
<p>தூக்கத்தை கெடுத்துக்கொள்ளும் பதின் வயதினருக்கு உயர் ரத்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது. இப்போது அதைவிட அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆய்வு முடிவு.</p>
<p>தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பான ஆய்வு மேற்கொண்டார். 13 முதல் 19 வயதினர் இடையே உள்ளவர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் சுமார் நாற்பது சதவிகிதம் பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்தது.</p>
<p>இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்தனர். தூக்கம் குறைவானது இளம் வயதினருக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்பட வழி வகுக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.</p>
<p>இதயநோய்க்கு வழிவகுக்கும்</p>
<p>தற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி பார்ப்பதோ, கனிணியில் விளையாடுவதோ குழந்தைகளின் உடல் நலத்தைத்தான் பாதிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். உயர் ரத்த அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சியானது மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.</p>
<p>அதேபோல் டொராண்டாவில் உள்ள இதய நோய், பக்கவாத மருத்துவமனையின் ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில் தூக்கக் கெடுதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதயநோய், பக்கவாதம் போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்று நிரூபித்துள்ளனர்.</p>
<p>இனி குழந்தைகளைப் பார்த்து தூங்காதே தம்பி தூங்காதே என்று பாடிய காலம் போய் நல்லா தூங்கும்மா செல்லம் என்று தாஜா செய்ய வேண்டியதுதான்&#8230;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/02/445.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கண்களுக்கு அழகு தரும் மேக் அப்!</title>
		<link>http://puthir.com/2012/02/441.html</link>
		<comments>http://puthir.com/2012/02/441.html#comments</comments>
		<pubDate>Thu, 02 Feb 2012 11:51:51 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=441</guid>
		<description><![CDATA[முகத்தின் முக்கிய அம்சம் கண்களும் உதடுகளும்தான். உள்ளத்தின் அழகை வெளிப்படுத்துபவை கண்கள். இந்த கண்களின் அழகுக்கு மெருகூட்டுபவை ஐ லைனர், ஐ ஷோடோ மற்றும் மஸ்காரா. இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி கண்களுக்கு அழகு படுத்துவதே தனிகலை. எந்தெந்த கண்களுக்கு எப்படி மேக் அப்போடவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். கவர்ச்சியூட்டும் ஐ ஷேடோ ஐ ஷேடோவில் லைட், மீடியம், டார்க் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-442" title="20-eye-shadow-5300" src="http://puthir.com/wp-content/uploads/2012/02/20-eye-shadow-5300.jpg" alt="" width="300" height="225" />முகத்தின் முக்கிய அம்சம் கண்களும் உதடுகளும்தான். உள்ளத்தின் அழகை வெளிப்படுத்துபவை கண்கள். இந்த கண்களின் அழகுக்கு மெருகூட்டுபவை ஐ லைனர், ஐ ஷோடோ மற்றும் மஸ்காரா. <span id="more-441"></span>இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி கண்களுக்கு அழகு படுத்துவதே தனிகலை. எந்தெந்த கண்களுக்கு எப்படி மேக் அப்போடவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.</p>
<p><strong>கவர்ச்சியூட்டும் ஐ ஷேடோ</strong></p>
<p>ஐ ஷேடோவில் லைட், மீடியம், டார்க் என்ற மூன்று வகை உண்டு. ஐ ஷேடோ தரமானதாக இருக்கவேண்டும். காலை நேரங்களில் லைட்டான கலரிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மீடியம் மற்றும் டார்க் கலரிலும் ஷேடோவை தடவலாம். கறுப்பாக இருப்பவர்கள் கண்களுக்கான மேக்அப்பில் அதிக கவனம் செலுத்தலாம் ஐ ஷேடோவில் ப்ளூ, பச்சை கலர்களை தவிர்த்து, பிரவுன், மெரூன், சாக்லெட் ஷேடுகளை யூஸ் பண்ணலாம். பளபளா எஃபெக்ட்டுக்காக உபயோகிக்கிற ஷிம்மர்களை தவிர்க்கவேண்டும்.</p>
<p><strong>ஐ லைனர் மஸ்காரா</strong></p>
<p>கண் மேக் அப் பிற்கு அடுத்த கட்டம் ஐ லைனர். ஐ லைனர் திக்காக போடுவதுதான் இப்போது பேஷன். மூன்றாவது கட்டம் மஸ்காரா இந்த மூன்றுமே கண்களின் அழகை மேலும் அதிகரித்து காட்டும்</p>
<p><strong>பெரிய இமைகளுக்கு அழகு</strong></p>
<p>உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்&#8230;கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷடோக்களை இடவும். பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள். கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.</p>
<p><strong>சிறிய கண்களை எடுப்பாக்க</strong></p>
<p>சிறிய கண்களைக் கொண்டவர்கள்..நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.</p>
<p>உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு&#8230; கண்கள் மீது ஐ ஷடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/02/441.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மேக்கப் சாதனங்களை பரிமாற வேண்டாம்!</title>
		<link>http://puthir.com/2012/02/437.html</link>
		<comments>http://puthir.com/2012/02/437.html#comments</comments>
		<pubDate>Thu, 02 Feb 2012 11:48:35 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=437</guid>
		<description><![CDATA[மேக்அப் இல்லாமல் இன்றைக்கு யாரும் வெளியில் செல்வதில்லை. விருந்து உள்ளிட்ட விழாக்களுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ எங்கு சென்றாலும் மேக் அப் என்பது அவசியமானதாகிவிட்டது. ரெடிமேடாக மேக் அப் சாதனங்களை பைகளில் வைத்திருக்கும் மங்கையர்கள் ஒருவருக்கொருவர் மேக் அப் சாதனங்களை பரிமாறிக்கொள்வதில் ஆபத்து அதிகம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் தோலியல் நிபுணர்கள். காம்பாக்ட் ஸ்பான்ச், ஐ லைனர், மஸ்கரா ப்ரஸ், போன்றவற்றை ஒருவர் பயன்படுத்தியதை மற்றவர் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-438" title="04-make-up1300" src="http://puthir.com/wp-content/uploads/2012/02/04-make-up1300.jpg" alt="" width="300" height="225" />மேக்அப் இல்லாமல் இன்றைக்கு யாரும் வெளியில் செல்வதில்லை. விருந்து உள்ளிட்ட விழாக்களுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ எங்கு சென்றாலும் மேக் அப் என்பது அவசியமானதாகிவிட்டது.<span id="more-437"></span></p>
<p>ரெடிமேடாக மேக் அப் சாதனங்களை பைகளில் வைத்திருக்கும் மங்கையர்கள் ஒருவருக்கொருவர் மேக் அப் சாதனங்களை பரிமாறிக்கொள்வதில் ஆபத்து அதிகம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் தோலியல் நிபுணர்கள்.</p>
<p>காம்பாக்ட் ஸ்பான்ச், ஐ லைனர், மஸ்கரா ப்ரஸ், போன்றவற்றை ஒருவர் பயன்படுத்தியதை மற்றவர் பயன்படுத்துவது முகத்தில் உள்ள தோலை பாதிக்கும் என்று நிமிஷா திவாரி என்பவர் எழுதிய நூலில் தெரிவித்துள்ளார்</p>
<p><strong>நுண்கிருமிகள் பாதிப்பு</strong></p>
<p>மும்பை போன்ற பணிச்சூழல் நிறைந்த வாழ்க்கையில் மேக்அப் என்பவது அவசியமானதாக உள்ளது. அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் மேக் அப் பொருட்களை லிப்ஸ்டிக், கண்மை பென்சில், உள்ளிட்டவற்றை ஒருவருக்கொருவர் உபயோகித்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அது தவறு என்கின்றனர். இதன் மூலம் கண்ணுக்குப்புலப்படாத நுண்கிருமிகள் பரவி தோலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் நிமிஷாதிவாரி.</p>
<p><strong>அலர்ஜியை தவிர்ப்போம்</strong></p>
<p>மேக் அப் ப்ரஸ் மூலம் தோலை பாதிக்கும் பாக்டீரியா ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் என்கிறார் பிரபல தோலியல் நிபுணர் ரஷ்மி ஷெட்டி. ஏனெனில் மூடப்பட்ட நிலையில் இருக்கும் மேக் அப் சாதனங்கள் அனைத்திலும் எளிதில் கிருமிகள் புகுந்த நன்கு வளரவாய்ப்புதாக ரஷ்மி தெரிவிக்கின்றார்.</p>
<p>மிகவும் இலேசான தோலை உடைய முகத்திற்கு முகப்பூச்சுக்களை பயன்படுத்தும் போது இந்த பாக்டீரியாக்கள் முகத்தை பாதித்து பருக்கள் மற்றும் அலர்ஜி ஏற்பட காரணமாகின்றன. எனவே ஒருவருடைய பொருளை மற்றொருவர் உபயோகிக்காமல் இருப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். கூடுமானவரை லிப்ஸ்டிக், ஐ லைனர் போன்றவைகளை தரமானவையாக வாங்கி உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் தோலியல் நிபுணர்கள். அதற்கென உள்ள பிரத்யேக கடைகளில் மட்டுமே அவற்றை வாங்கி உபயோகிக்க வேண்டும்.</p>
<p><strong>காலாவதி சாதனங்கள்</strong></p>
<p>மேக்அப் சாதனங்களை வாங்கும் போது உபயோகிக்கும் தேதி பார்த்து வாங்குவது அவசியம். ஏனெனில் காலாவதியான மேக்அப் சாதனங்கள் முகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றார் மருத்துவர் விதுலா படீல். காலாவதியான கண்மையினை உபயோகிக்கும் போது கண்ணுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் அவர். அதுபோல மேக் அப் சாதனங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் உதடு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார் விதுலா.</p>
<p>தினந்தோறும் மேக் அப் சாதனங்களை உபயோகிப்பவர்கள் அதனை எளிதில் காற்றுப்புகாத நன்றாக மூடப்பட்ட பாக்ஸ்களில் மட்டுமே வைத்துக்கொள்ளவேண்டும் அப்பொழுதுதான் அதில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் புகுவதை தடுப்பதோடு முகத்திற்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என்கின்றனர் தோலியல் நிபுணர்கள். எனவே முகத்திற்கு பயன்படுத்தும் மேக் சாதனங்களை ஒருவர் கைப்பட உபயோகித்து பாதுகாப்பாக வைப்பதில்தான் முகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/02/437.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அவருக்கு உடம்புக்கே முடியலை..அதிகரிக்கும் &#8216;கவலை&#8217; மனைவிகள்!</title>
		<link>http://puthir.com/2012/02/433.html</link>
		<comments>http://puthir.com/2012/02/433.html#comments</comments>
		<pubDate>Thu, 02 Feb 2012 11:45:54 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[லைப் ஸ்டைல்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=433</guid>
		<description><![CDATA[கணவருக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் விரதம் இருந்து வேண்டுதல் நிறைவேற்றும் வழக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் அலகு குத்தி காவடி எடுப்பதில்லை. ஆனால் அடிக்கடி முடியாமல் போகும் கணவரின் உடல் நலனில் அக்கறை கொண்டு கவலைப்படுகின்றனர். இன்றைய நாகரீக உலகில் முறையான உணவுப் பழக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவு உற்பத்தி மற்றும் வேலைப் பளு போன்ற &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-434" title="01-caring-wives-300" src="http://puthir.com/wp-content/uploads/2012/02/01-caring-wives-300.jpg" alt="" width="300" height="225" />கணவருக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் விரதம் இருந்து வேண்டுதல் நிறைவேற்றும் வழக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இருக்கிறது. <span id="more-433"></span>ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் அலகு குத்தி காவடி எடுப்பதில்லை. ஆனால் அடிக்கடி முடியாமல் போகும் கணவரின் உடல் நலனில் அக்கறை கொண்டு கவலைப்படுகின்றனர்.</p>
<p>இன்றைய நாகரீக உலகில் முறையான உணவுப் பழக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவு உற்பத்தி மற்றும் வேலைப் பளு போன்ற பல காரணங்களால் மனிதர்களின் உடலில் நோய்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.</p>
<p>தங்களுடைய கணவரின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை குறித்து பத்தில் எட்டுப் பெண்கள் பெரிதும் கவலையடைந்து வருவதாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் தெரியவந்துள்ளது.</p>
<p>இங்கிலாந்தில் உள்ள காப்பீடு நிறுவனம் 3000 பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 50 விகிதம்பேர் தங்களின் துணைவர்கள் பெருத்த தொந்தியுடைவர்களாக காணப்படுவதால் தாம் கவலையடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். 37 சதவிகிதம் பேர் தங்களது கணவனின் அதிக எடை குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ளனர்.</p>
<p><strong>ரொம்ப உழைக்கிறார்</strong></p>
<p>தமது துணைவர்களின் அலுவலகங்களில் வேலைப் பளு, உறக்கமின்மை, போதிய உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுகளை உட்கொள்ளல் போன்றன மனைவியர்களின் பிரதான கவலைக்குரிய விசயங்களாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.</p>
<p>மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்களது அலுவலகங்களில் தங்களது கணவர்மார்களுக்கு அதிகமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.</p>
<p>நான்கில் ஒரு சதவிகித பெண்கள் கொழுப்பு மிக்க உணவுகளை தமது ஆண்கள் அதிகமாக உட்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.</p>
<p><strong>ஆரோக்கியமற்ற சூழல்</strong></p>
<p>பெரும்பான்மையான பெண்கள் தமது கணவர்களின் உடற்பயிற்சி முதல் சமநிலையான வாழ்க்கை வரை கவலை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>31 சதவீதமான பெண்கள் தங்களது கணவர்கள் முறையாக உடற்பயிற்சி செய்வதில்லையென தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமற்ற முறையில் தொழில் புரிவதாக அதிக எண்ணிக்கையான பெண்கள் விமர்சித்துள்ளனர். 26 வீதமான ஆண்கள் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை உண்பதாகவும், 23 சத வீதமானவர் முறையான உறக்கம் கொள்வதில்லை எனவும், 19 சதவீதமானோர் உணவை புறக்கணிப்பதாகவும் மேலும் 19 சதவீதமானோர் அதிகமாக மது அருந்துவதாகவும் அவர்களின் மனைவிமார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>பத்து சதவீதமான பெண்கள் தமது கணவர் அலுவலக வேலைகளை வீட்டிலும் வந்து செய்வதால் அவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்த பொம்பளைங்களே இப்படித்தான் பாஸ், ரொம்ப பாவம்ஸ்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/02/433.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள்</title>
		<link>http://puthir.com/2012/02/430.html</link>
		<comments>http://puthir.com/2012/02/430.html#comments</comments>
		<pubDate>Thu, 02 Feb 2012 11:43:42 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[உங்கள் நலம்]]></category>
		<category><![CDATA[உணவு பழக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=430</guid>
		<description><![CDATA[அதிகமாக சாப்பிடுவதும், மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிப்பதும் மூளையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தை செயலிழக்கச் செய்பவைகள் பற்றி மூளை நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளவை உங்களுக்காக. அதிகமா சாப்பிடாதீங்க மிக அதிகமாக உணவு உண்பதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். மேலும் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது, &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-431" title="30-overeating" src="http://puthir.com/wp-content/uploads/2012/02/30-overeating.jpg" alt="" width="300" height="225" />அதிகமாக சாப்பிடுவதும், மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிப்பதும் மூளையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தை செயலிழக்கச் செய்பவைகள் பற்றி மூளை நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளவை உங்களுக்காக.<span id="more-430"></span></p>
<p><strong>அதிகமா சாப்பிடாதீங்க</strong></p>
<p>மிக அதிகமாக உணவு உண்பதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். மேலும் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.</p>
<p><strong>கட்டாயம் காலை உணவு</strong></p>
<p>காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை பாதிப்பிற்கு காரணமாகும். மேலும் புகை பிடிப்பதால் மூளை சுருங்குகிறது இது அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.</p>
<p><strong>சுற்றுச் சூழல் சீர்கேடு</strong></p>
<p>மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும். நீண்ட நாட்களுக்கு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள் ஏனெனில் நன்றாக தூங்குவது நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். அதேபோல் தலையை மூடிக்கொண்டு தூங்குவதும் ஆபத்தானதாம். இதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரித்து சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. இதனால் மூளை பாதிப்படைகிறது.</p>
<p><strong>ஓய்வு அவசியம்</strong></p>
<p>உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.</p>
<p>மூளைக்கு வேலை தராமல் இருப்பதும் ஆபத்தானதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.</p>
<p><strong>நிறைய பேசுங்க</strong></p>
<p>அதிகம் பேசாமல் இருப்பதும் மூளையை பாதிக்குமாம். எனவே அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/02/430.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!</title>
		<link>http://puthir.com/2012/02/427.html</link>
		<comments>http://puthir.com/2012/02/427.html#comments</comments>
		<pubDate>Thu, 02 Feb 2012 11:40:41 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[உங்கள் நலம்]]></category>
		<category><![CDATA[சித்த வைத்தியம்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=427</guid>
		<description><![CDATA[அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது. பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிலும், &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-428" title="28-beet-leaves-300" src="http://puthir.com/wp-content/uploads/2012/02/28-beet-leaves-300.jpg" alt="" width="300" height="225" />அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.<span id="more-427"></span></p>
<p>பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.</p>
<p>ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர்.. சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றன</p>
<p><strong>சுவையான கீரை</strong></p>
<p>பீட்ரூட்டுக்கு சுகந்தா என்ற என்ற வேறு பெயரும் உண்டு. இந்தியாவில் கூட கிழங்குக்காக மட்டுமின்றி கீரைக்காகவும் இதனை பயிரிடுகின்றனர். இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பரும்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம். பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயிர்களுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.</p>
<p><strong>கரோட்டின் உயிர்சத்து</strong></p>
<p>பீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் ஏயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் வைட்டமின் ஏ நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும்.</p>
<p><strong>புரதம், தாது உப்புக்கள்</strong></p>
<p>பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது.</p>
<p>பீட்ரூட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.</p>
<p><strong>கண்நோய்கள் குணமாகும்</strong></p>
<p>உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுகிறது. உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும் என்றும் உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/02/427.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நுரையீரல் நோய் தீர்க்கும் முசுமுசுக்கை</title>
		<link>http://puthir.com/2012/02/424.html</link>
		<comments>http://puthir.com/2012/02/424.html#comments</comments>
		<pubDate>Thu, 02 Feb 2012 11:37:45 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[உங்கள் நலம்]]></category>
		<category><![CDATA[சித்த வைத்தியம்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=424</guid>
		<description><![CDATA[கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது. அமைதியின்மை போக்கும் இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><iframe id="twttrHubFrame" style="top: -9999em; width: 10px; height: 10px; position: absolute;" name="twttrHubFrame" src="http://platform.twitter.com/widgets/hub.1326407570.html" frameborder="0" scrolling="no"></iframe><img class="aligncenter size-full wp-image-425" title="27-musumuskkai-300" src="http://puthir.com/wp-content/uploads/2012/02/27-musumuskkai-300.jpg" alt="" width="300" height="225" />கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது.<span id="more-424"></span> சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.<br />
<strong>அமைதியின்மை போக்கும்</strong></p>
<p><strong></strong><br />
இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும்,<br />
மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை.  உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.<br />
<strong>ஆஸ்துமா குணமாகும்</strong><br />
முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.<br />
<strong>முசுமுசுக்கை தைலம்</strong><br />
முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/02/424.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அன்பா இருங்க, மன அழுத்தம் போகும்!</title>
		<link>http://puthir.com/2012/02/421.html</link>
		<comments>http://puthir.com/2012/02/421.html#comments</comments>
		<pubDate>Thu, 02 Feb 2012 11:35:36 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[உங்கள் நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=421</guid>
		<description><![CDATA[மன அழுத்தம், டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்கா மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கைப் பற்றிய பயமும் இள வயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-422" title="24-depression1-300" src="http://puthir.com/wp-content/uploads/2012/02/24-depression1-300.jpg" alt="" width="300" height="225" />மன அழுத்தம், டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்கா மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கைப் பற்றிய பயமும் இள வயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது.<span id="more-421"></span> இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்று உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.<br />
<strong>அதிக சந்தோசம் அதிக கவலை</strong></p>
<p><strong></strong><br />
பெரும்பாலான குழந்தைகள் அதிக சந்தோசம், அதிக கவலையினால் பீடிக்கப்படுகின்றனர். இதற்கு மேனிக் டிப்ரசன் என்று மருத்துவ உலகினர் பெயரிட்டுள்ளனர். இதனால் குழந்தைகளின் மூட் எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று கண்டுபிடிக்க முடியாததாகிவிடுகிறது. நார்மல் போல தெரிந்தாலும், ஒருசில சமயங்களில் அதீத மகிழ்ச்சியுடன் உற்சாகமாக திரிகின்றனர். சில சமயங்களில் அதீத கவலையுடன் சோகத்தில் மூழ்கி<br />
விடுகின்றனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை.தனிமையில் அமர்ந்து எதையாவது சிந்தித்த ண்ணம் இருக்கின்றனர். இதனால் பள்ளிகளில் கவனிக்கும் திறன் குறைகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மன அழுத்தத்தை களைவது அவசியம் என்று தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.<br />
<strong>எளிமையான எதிர்பார்ப்பு</strong></p>
<p><strong></strong><br />
கவுன்சிலிங், உளவியல் ரீதியான சிகிச்சை போன்றவற்றையும் அளிக்கலாம். அதேசமயம் இள வயதினருக்கு குரூப் சைக்கோ தெரபி என்னும் சிகிச்சை முறையினை கையாண்டு அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த பழக்க வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.<br />
<strong>சத்தான உணவு அவசியம்</strong></p>
<p><strong></strong><br />
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு கொடுக்கப்படுகிறதா என்பதை உணவியல் வல்லுநர்களிடம் ஆலோசகரிடம்  உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும்.  ஏனெனில் தவறான உணவு பழக்கம் வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும். இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.<br />
குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், போன்றவற்றை தடுக்கலாம்.<br />
<strong>நட்பான சூழல் அவசியம்</strong></p>
<p><strong></strong><br />
வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. எனவே இளம் வயதிலே வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.<br />
<strong>நோய்கள் தரும் மன அழுத்தம்</strong></p>
<p><strong></strong><br />
குழந்தைகளின் உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும்.<br />
நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். இந்த பழக்கங்களை சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள் இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து குழந்தைகளை காக்க முடியும் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/02/421.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

