<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Puthir.com</title>
	<atom:link href="http://puthir.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://puthir.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 15 May 2012 12:00:37 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>கோபம் வந்தா உடனே அடிச்சிறாதீங்க!</title>
		<link>http://puthir.com/2012/05/507.html</link>
		<comments>http://puthir.com/2012/05/507.html#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 12:00:37 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தகவல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=507</guid>
		<description><![CDATA[தம்பதியரிடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும். இடையில பேசாதீங்க குடும்பத்தில் எப்பவுமே சண்டை என்று ஆரம்பித்தால் குரல் உயர்த்திப் பேசுவதை யாராவது ஒருவர் நிறுத்தவேண்டும். இடைமறித்துப் பேசுவதையும் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினை பெரிதாகாமல் இருக்கும். தவறை ஒப்புக்கொள்ளுங்கள் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-full wp-image-508" title="15-couples-300" src="http://puthir.com/wp-content/uploads/2012/05/15-couples-300.jpg" alt="" width="300" height="225" />தம்பதியரிடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும்.<span id="more-507"></span></p>
<p><strong>இடையில பேசாதீங்க</strong></p>
<p>குடும்பத்தில் எப்பவுமே சண்டை என்று ஆரம்பித்தால் குரல் உயர்த்திப் பேசுவதை யாராவது ஒருவர் நிறுத்தவேண்டும். இடைமறித்துப் பேசுவதையும் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினை பெரிதாகாமல் இருக்கும்.</p>
<p><strong>தவறை ஒப்புக்கொள்ளுங்கள்</strong></p>
<p>ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தாதீர்கள்.யார் மீது தவறு என்றாலும் அதை ஒப்புங்கள். அப்பொழுதுதான் குடும்பத்தில் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.</p>
<p><strong>அடிக்க கை நீட்டாதீர்கள்</strong></p>
<p>எந்த சூழ்நிலையிலும் துணையை அடிக்க கை நீட்டாதீர்கள். அப்புறம் பிரச்சினையை தீர்க்கவே முடியாத அளவிற்கு அது தொடர்கதையாகிவிடும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை நேரடியாக தெரிவித்துவிடுங்கள். பூடகமாக பேசுவதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது.</p>
<p><strong>கோபத்திற்கு முற்றுப்புள்ளி</strong></p>
<p>எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு சமாதான பேச்சு மூலம் தீர்வு காண முயலுங்கள். பெரும்பாலான குடும்பங்களில் தம்பதியர் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்ளாததே பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. எனவே எந்த பிரச்சினை என்றாலும் ஒருவருக்கொருவர் பேசி பிரச்சினையை தீர்க்க முயலுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/05/507.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>திருமணம் செய்யப்போறீங்களா? அடிப்படை தெரிஞ்சிருக்கணுமே!</title>
		<link>http://puthir.com/2012/05/504.html</link>
		<comments>http://puthir.com/2012/05/504.html#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 11:58:01 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[லைப் ஸ்டைல்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=504</guid>
		<description><![CDATA[புதிதாக திருமணம் செய்துக்கொள்ளப்போகும் இளசுகள் செக்ஸ் குறித்த சில அடிப்படை விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் விழித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். காதலும் உணவும் நாம் உண்ணும் உணவு நம் பசியை தீர்பதற்கு மட்டுமல்ல. நம் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. ஆணோ, பெண்ணோ சத்தான &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-full wp-image-505" title="15-couples-4-300" src="http://puthir.com/wp-content/uploads/2012/05/15-couples-4-300.jpg" alt="" width="300" height="225" />புதிதாக திருமணம் செய்துக்கொள்ளப்போகும் இளசுகள் செக்ஸ் குறித்த சில அடிப்படை விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் விழித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.<span id="more-504"></span></p>
<p><strong>காதலும் உணவும்</strong></p>
<p>நாம் உண்ணும் உணவு நம் பசியை தீர்பதற்கு மட்டுமல்ல. நம் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. ஆணோ, பெண்ணோ சத்தான உணவுகளை உண்டு உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஆரோக்கியமாக உறவுக்கு வழி ஏற்படும். அதன்மூலம் அறிவார்ந்த ஆரோக்கியமான சந்ததிகள் பிறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.</p>
<p>திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள், மீன் போன்ற உணவுகளை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதை மனதில் வைத்துதான் நம் ஊரில் திருமணம் நிச்சயமானால் விருந்து, திருமணம் முடிந்த பின்னர் புதுமணத் தம்பதியருக்கு விருந்து வைக்கின்றனர்.</p>
<p><strong>அடிப்படை விசயங்கள்</strong></p>
<p>திருமணம் ஆகப்போகிறது என்றாலே சில விசயங்களை அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். திருமணம் ஆன நண்பர்களிடம் அடிப்படை விசயங்களை கேட்டுத்தெரிந்து கொள்வதில் தப்பே இல்லை என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் சந்தோசமான விசயங்கள் சிலவற்றை சுவாரஸ்யமாக பேசவேண்டும் என்கின்றனர் அவர்கள். அப்பொழுதுதான் அந்த பெண்ணுக்கும் ஓரளவிற்கு காதல் உணர்வுகள் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.</p>
<p><strong>உடற்பயிற்சி அவசியம்</strong></p>
<p>ஆணோ, பெண்ணோ உடல் கட்டமைப்பிற்கு உடற்பயிற்சி அவசியம். நடனம் கூட உடல் அமைப்பினை கட்டுக்குள் வைக்கிறது. எனவே வாக்கிங், ஜாகிங் தவிர சின்ன சின்ன உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். திருமணம் ஆன புதுமணத் தம்பதியர் மனதிற்குப் பிடித்த இசையை போட்டு இஷ்டத்திற்கு நடனமாடுங்கள். அதுவே கிளர்ச்சியூட்டக்கூடிய உடற்பயிற்சிதான்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/05/504.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுவாசக் கோளாறுகளைப் போக்கும் கிவி பழம்!!!</title>
		<link>http://puthir.com/2012/05/501.html</link>
		<comments>http://puthir.com/2012/05/501.html#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 11:56:41 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[உங்கள் நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=501</guid>
		<description><![CDATA[பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள். இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம். ருடர்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் பால் 27 பழங்களை வைத்து ஆராய்ந்தார். இதில் கிவி பழத்தில் புரதச்சத்தின் அளவு மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள். இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம். ருடர்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் பால் 27 பழங்களை வைத்து ஆராய்ந்தார். இதில் கிவி பழத்தில் புரதச்சத்தின் அளவு மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெரிந்துள்ளது.<span id="more-501"></span></p>
<p><strong>கிவியின் நன்மைகள்</strong></p>
<p>கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். மேலும் ஏப்ரல் 2004ல் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.</p>
<p>அனைவருக்கும் தெரியும் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.</p>
<p>போலிக் ஆஸிட் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும்</p>
<p>நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்களையும் தருகிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது.</p>
<p>டையட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும். மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த பழமாகும்.</p>
<p>கிவி பழத்தில் ஜிங்க் இருப்பதால் தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது.</p>
<p><strong>கிவி பழத்தை எப்படி தேர்ந்தெடுக்கலாம்?</strong></p>
<p>கிவி பழத்தின் மேல் பகுதி தடிமனாகவும், உட்பகுதியில் சுவையான பழமும் இருக்கும். இதன் மேல் பகுதியை அழுத்தினால் சற்று உள்ளே செல்ல வேண்டும், அதுவே சாப்பிடுவதற்கு ஏற்ற பழம். மேலும் இதில் பெரிய பழம் நன்றாக இருக்கும், சிறிய பழம் சுவை குறைவாக இருக்கும் என்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால், பெரிய பழத்தை விட சிறிய பழமே சுவையாக இருக்கும்.</p>
<p>ஆகவே கிவி பழத்தை சாப்பிடுங்க! ஆரோக்கியமா இருங்க!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/05/501.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆணை விட பெண்ணுக்கு ஆசை அதிகமாம்!</title>
		<link>http://puthir.com/2012/05/498.html</link>
		<comments>http://puthir.com/2012/05/498.html#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 11:54:53 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[லைப் ஸ்டைல்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=498</guid>
		<description><![CDATA[உறவு கொள்வதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறு தருணங்களில் ஆசை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆணைவிட பெண்ணுக்குத்தான் பாலுணர்வு ஆசை அதிகம் ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உறவுக்கான ஆசைகள் பாலுணர்வு ஆசை மூளையில் இருந்து பிறப்பிக்கப்படுகிறது. உடல் தன்னை தயார் செய்து கொண்டு இயங்குகிறது. இதற்கு மரபணு எனப்படும் ஜீன்களையும் உடன் ஆலோசிக்கிறது மூளை. உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-full wp-image-499" title="15-sex-drive-300" src="http://puthir.com/wp-content/uploads/2012/05/15-sex-drive-300.jpg" alt="" width="300" height="225" />உறவு கொள்வதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறு தருணங்களில் ஆசை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆணைவிட பெண்ணுக்குத்தான் பாலுணர்வு ஆசை அதிகம் ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.<span id="more-498"></span></p>
<p><strong>உறவுக்கான ஆசைகள்</strong></p>
<p>பாலுணர்வு ஆசை மூளையில் இருந்து பிறப்பிக்கப்படுகிறது. உடல் தன்னை தயார் செய்து கொண்டு இயங்குகிறது. இதற்கு மரபணு எனப்படும் ஜீன்களையும் உடன் ஆலோசிக்கிறது மூளை. உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை.</p>
<p>ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்திலும் ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் கலவி ஆசை கிளர்ச்சி பெற்று எழுகிறது. கிளிட்டோரிஸ் என்ற உறுப்புத் தான் பெண்களுக்கு செக்ஸ் ஆசையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது.</p>
<p><strong>பெண்ணுக்கு ஆசை அதிகம்</strong></p>
<p>பெண்ணுக்கு ஆர்வம் இல்லாத சமயங்களில் ஆண் பல்வேறு விளையாட்டுக்களின் மூலம் பெண்ணிற்கு ஆர்வம் வரச்செய்கிறான். இதில் விஷேசம் என்னவென்றால், ஆண்களை விட, பெண்களுக்குத் தான் எல்லாப் பருவத்திலும் பாலுணர்வு ஆசை அதிகம் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிப்பது தான்! இது போலவே உடலுறவின் போதும் ஆண்களுக்குத் தான் எளிதாக உடல் தளர்வு ஏற்படுகிறது. உடலுறவின் போதும், உடலுறவின் முடிவில் வரும் உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என பாலியல் ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.</p>
<p><strong>அதீத உச்சக்கட்ட உணர்வு</strong></p>
<p>பாலுறவு என்பது சம்பிரதாயமான நிகழ்வோ அல்லது கலியாணக் கடமையோ அல்ல. இரு மனங்களின் ஒத்திசைவின் அவற்றின் அன்புப் பிணைப்பின் ஓரியக்க நிலை என்றே கருத வேண்டும்</p>
<p>பொதுவாக ஆண்கள் சிங்கிள் ஆர்கஸம் உள்ளவர்கள். பெண்கள் பலமுறை உச்சமடைய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆக அதே போல் பெண்களின் உணர்வுகள் பாலியலில் அதிகம் ஆதிக்கம் செய்ய வேண்டியதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதும் அவசியம். தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்துநிமிடத்தில் முடிந்துவிடக்கூடியது என்று ஆண்கள் தீர்மானிக்கலாம். அதுவே பெண்களைப் பொறுத்தவரை நீடிக்கலாம் குறுகியதாக இருக்கலாம். அது அவர்களின் தனி உரிமை உணர்வு நிலை சார்ந்தது. அதை ஆண் மட்டும் தீர்மானிக்க முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/05/498.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஓவர் டென்சன் பார்ட்டியா? உடம்புக்கு ஆகாது!!</title>
		<link>http://puthir.com/2012/03/494.html</link>
		<comments>http://puthir.com/2012/03/494.html#comments</comments>
		<pubDate>Thu, 29 Mar 2012 18:07:26 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[உங்கள் நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=494</guid>
		<description><![CDATA[இன்றைக்கு உள்ள இளைய தலைமுறயினர் பத்தில் ஒருவருக்கு ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இந்த உயர் ரத்த அழுத்த நோயானது மவுனமாக இருந்து ஆளை கொள்ளும் ஆபத்தான நோய் என்று மருத்துவ உலகினர் எச்சரிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், இதயபாதிப்பு, சிறுநீராக கோளாறுகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு பெரும்பாலோனோர் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-full wp-image-495" title="hyper-tension" src="http://puthir.com/wp-content/uploads/2012/03/hyper-tension.jpg" alt="" width="300" height="225" />இன்றைக்கு உள்ள இளைய தலைமுறயினர் பத்தில் ஒருவருக்கு ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. <span id="more-494"></span>இந்த உயர் ரத்த அழுத்த நோயானது மவுனமாக இருந்து ஆளை கொள்ளும் ஆபத்தான நோய் என்று மருத்துவ உலகினர் எச்சரிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், இதயபாதிப்பு, சிறுநீராக கோளாறுகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p><strong>உயர் ரத்த அழுத்தம்</strong></p>
<p>இன்றைக்கு பெரும்பாலோனோர் சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் உடலில் அதிக கொழுப்பு கூடுகிறது. இதனால் உடல் பருமன் நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தினால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு ஏற்படுகிறது. அதிகமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே உடலானது நோய்களின் கூடாரமாக மாறுவதோடு இளம்வயதில் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட பல நோய்கள் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைகின்றன.</p>
<p><strong>பாரம்பரிய உணவுகள்</strong></p>
<p>உடலில் பிரச்னைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. சிறு வயது முதல் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.</p>
<p>சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.</p>
<p>குழந்தைகள் பர்கர், பீட்ஸா மற்றும் ஜங்க் புட் வகைகள் அடிக்கடி சாப்பிடுவதற்கு தடை விதிக்கவும். அதே கார்பனேட் அடங்கிய குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிக்க கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இளநீர், பழரசங்கள் சாப்பிட பழக்கப் படுத்தலாம்.</p>
<p><strong>நெல்லிக்கனி ஜூஸ்</strong></p>
<p>ஹைபர் டென்சன் ஏற்பட்டவர்களுக்கு பூண்டு சிறந்த மருந்தாக உள்ளது. வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் பருகலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. இதன் மூலம் உயர்ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.</p>
<p>தினசரி காலையில் நெல்லிக்கனி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஜூஸாக கலந்து பருகலாம். இதனால் உயர்ரத்த அழுத்தம் கட்டுப்படும்.</p>
<p>உயர் ரத்த அழுத்த நோய்க்கு தர்பூசணி சிறந்த மருந்தாக உள்ளது. தினசரி தர்பூசணி பழத்தை சாப்பிடலாம் அல்லது தர்பூசணி பழச் சாறுடன் கசகசா சேர்த்து அரைத்து தினசரி வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.</p>
<p><strong>துளசி, வேப்பிலை</strong></p>
<p>துளசி 5 இலைகள் வேப்பிலை 5 சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து பருகவேண்டும். ஒருவாரத்திற்கு தொடர்ந்து இதனை குடித்து வர உயர்ரத்த அழுத்தம் குணமாகும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/03/494.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இந்திய சமையல் பொருட்கள், மூலிகைகள் மையலுக்கு ஏற்றவை-ஆய்வில் தகவல்</title>
		<link>http://puthir.com/2012/03/491.html</link>
		<comments>http://puthir.com/2012/03/491.html#comments</comments>
		<pubDate>Sun, 25 Mar 2012 17:39:57 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[லைப் ஸ்டைல்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=491</guid>
		<description><![CDATA[இந்தியாவில் கிடைக்கும் மூலிகைகளும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்கள் உணர்வுகளை தூண்டி உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த உணவுகள் உடலின் பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சமையலுக்கு ருசிக்காகவும், வாசனைக்காகவும், ஏலம், கிராம்பு, பூண்டு, வெங்காயம், போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுக்கு உடலுக்கு ஊட்டம் தருவதோடு உற்சாகத்தையும் தரும் என்றும் பாலுணர்வை தூண்டுவதில் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-492" title="relationship1-300" src="http://puthir.com/wp-content/uploads/2012/03/relationship1-300.jpeg" alt="" width="300" height="225" />இந்தியாவில் கிடைக்கும் மூலிகைகளும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்கள் உணர்வுகளை தூண்டி உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.<span id="more-491"></span> இந்த உணவுகள் உடலின் பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்தியாவில் சமையலுக்கு ருசிக்காகவும், வாசனைக்காகவும், ஏலம், கிராம்பு, பூண்டு, வெங்காயம், போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுக்கு உடலுக்கு ஊட்டம் தருவதோடு உற்சாகத்தையும் தரும் என்றும் பாலுணர்வை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்</p>
<p><strong>பாலுணர்வு அதிகம்</strong></p>
<p>25 லிருந்து 52 வயது வரை உடைய 60 ஆரோக்கியமான ஆண்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆறுவாரங்களுக்கு வாரம் இரண்டு முறை மூலிகை உணவுகள் தரப்பட்டன. மூலிகைகளை உண்டவர்களின் பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அளவு அதிகபட்சமாக 28 சதவிகிதம் அதாவது 16.1 லிருந்து 20.6 சதவிகிதமாக உயர்ந்திருந்தது.</p>
<p>இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் நறுமணப் பொருட்கள், மூலிகைகள் போன்றவை மனிதர்களின் பாலுணர்வை தூண்டுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவை &#8216;டெய்லி மெயில்&#8217; பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/03/491.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆயுளை அதிகரிக்கும் நெருக்கம் – ஆய்வில் தகவல்</title>
		<link>http://puthir.com/2012/03/488.html</link>
		<comments>http://puthir.com/2012/03/488.html#comments</comments>
		<pubDate>Sun, 25 Mar 2012 17:38:36 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=488</guid>
		<description><![CDATA[தம்பதியரிடையே ஏற்படும் நெருக்கமான அன்னியோன்யமான செயல்களால் மன அழுத்தம் குறைவதோடு உயர்ரத்த அழுத்த நோய் குணமடைவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தம்பதியரிடையே ஏற்படும் சர்வரோக நிவாரணியாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு வார காலத்திற்கு தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் உறவு வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-489" title="love1-300" src="http://puthir.com/wp-content/uploads/2012/03/love1-300.jpeg" alt="" width="300" height="225" />தம்பதியரிடையே ஏற்படும் நெருக்கமான அன்னியோன்யமான செயல்களால் மன அழுத்தம் குறைவதோடு உயர்ரத்த அழுத்த நோய் குணமடைவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தம்பதியரிடையே ஏற்படும் சர்வரோக நிவாரணியாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.<span id="more-488"></span> ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு வார காலத்திற்கு தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் உறவு வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது.</p>
<p><strong>நோய் எதிர்ப்பு சக்தி</strong></p>
<p>உறவின் மூலம் டிஹெஇஏ எனப்படும் (Dehydroepiandrosterone) ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறதாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மேலும் பாதிப்படைந்த தசை செல்கள் சரியாவதோடு, சருமத்திற்கும் பளபளப்பு ஏற்படுகிறது.</p>
<p><strong>ஆயுள் அதிகரிக்கும்</strong></p>
<p>உறவின் போது ஏற்படும் ஆர்கஸம் வாழ்வின் ஆயுளை நீடிக்கச் செய்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தம்பதியரின் நெருக்கம், உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துதோடு, கண்ணின் மணியை விரியச்செய்கிறது. இதனால் பார்வையை விரிவடைகிறது. நீரிழிவு போன்ற நோய்களைக் கூட தாம்பத்ய உறவு குணப்படுத்துகிறதாம். புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துவதோடு அறவே குணப்படுத்தவும் செய்கிறதாம். மார்பகப் புற்றுநோயை குணப்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.</p>
<p><strong>மூளைக்கு புத்துணர்ச்சி</strong></p>
<p>உறவின் போது ரத்த ஓட்டம் அதிகரித்து மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் மூளை புத்துணர்ச்சியடைவதோடு உடல் உறுப்புகள் சுறுசுறுப்படைகின்றன. உடலில் கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுவதால் உடலும், உள்ளமும் லேசான உணர்வை பெறுகின்றன.</p>
<p><strong>இளமை தரும் மருந்து</strong></p>
<p>30 நிமிட உறவானது உடலில் 85 கலோரிகளை எரித்து உடலை கட்டுகோப்பாக வைக்கின்றதாம். எனவே செக்ஸ் மிகச்சிறந்த எக்ஸர்சைஸ் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது உடல் ரீதியான பிரச்சினைகளை போக்குவதோடு உள்ளரீதியான இறுக்கத்தையும் அகற்றுகிறது என்பது உளவியலாளர்களின் கருத்து.</p>
<p><strong>வலிநிவாரணி</strong></p>
<p>தாம்பத்யமானது வலி நிவாரணியாக திகழ்கிறது. உறவின் மூலம் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். இது தலைவலி, தசைவலி போன்றவைகளையும் நீக்கும் வலிநிவாரணியாகவும் விளங்குகிறது.</p>
<p><strong>ரத்த அழுத்தம் கட்டுப்படும்<br />
</strong><br />
தாம்பத்ய உறவின் மிக முக்கியமான நன்மையாக மன அழுத்தம் குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வில் மன அழுத்தமான சூழலில் இருந்த தம்பதியர் உறவிற்குப்பின் தங்களின் மன அழுத்தம் குறைந்த தாக தெரிவித்தனர். அவர்களின் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே காதலுக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. நெருக்கமான உறவு கொள்வதன் மூலம் , மன அமைதி ஏற்படுவதோடு ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/03/488.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>30 வயது பெண்களும், 40 வயது ஆண்களும் அழகு– ஆய்வு முடிவு</title>
		<link>http://puthir.com/2012/03/485.html</link>
		<comments>http://puthir.com/2012/03/485.html#comments</comments>
		<pubDate>Sun, 25 Mar 2012 17:37:02 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தகவல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=485</guid>
		<description><![CDATA[பதின் பருவத்தில் தான் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பது கவிஞர்களின் சொல்லாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் முப்பது வயதைக் கடந்த நடுத்தர வயதில்தான் பெண்கள் அழகாக இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.  மனிதர்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என அநேகம் பேர் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-486" title="women-sexiest-in-their-30s-" src="http://puthir.com/wp-content/uploads/2012/03/women-sexiest-in-their-30s-.jpg" alt="" width="300" height="225" />பதின் பருவத்தில் தான் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பது கவிஞர்களின் சொல்லாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் முப்பது வயதைக் கடந்த நடுத்தர வயதில்தான் பெண்கள் அழகாக இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. <span id="more-485"></span></p>
<p>மனிதர்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என அநேகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.</p>
<p><strong>&#8216;ஆண்டிகள்தான்&#8217; அழகு!</strong></p>
<p>மனிதர்களின் அழகு பற்றி 1000 ம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆண்களிடம் கேட்ட கேள்விகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக ஏராளமான இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் ( ஏன் எல்லோரும் இப்படி &#8216;ஆன்டி ஹீரோ&#8217;வாக மாறினாங்களோ தெரியலை)</p>
<p><strong>ஆண்கள் 40 வயதில் அழகு</strong></p>
<p>இதேபோல் பெண்களிடம் கேட்கப்பட்டதில் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்தான் மிக அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிவதாக கூறியுள்ளனர் (அப்படியா! ) ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது.</p>
<p><strong>அழகிற்கு காரணம் என்ன?</strong></p>
<p>இளம் வயதில் குடும்ப சூழ்நிலையால் தன்னைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பல பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றுக்கொண்டு ஒரளவு லைஃபில் செட்டில் ஆன திருப்தியில் தங்களை அழகு படுத்திக்கொள்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர். அதனாலேயே பிறரது கண்களுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிகின்றனர்.</p>
<p>ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் இதனாலேயே அவர்களின் உடல் அமைப்பு கவர்ச்சிகரமானதாக மாறிவிடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.</p>
<p>எப்படி இருந்தா என்ன, ஆண்களும் அழகுதான், பெண்களும் அழகுதான் &#8211; எந்த வயதாக இருந்தாலும் என்பதை உணர்ந்தால் எப்போதும் எல்லோரும் அழகுதான்..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/03/485.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பெண்களின் மனதை கவர இதைப் படிங்க!</title>
		<link>http://puthir.com/2012/03/482.html</link>
		<comments>http://puthir.com/2012/03/482.html#comments</comments>
		<pubDate>Sun, 25 Mar 2012 17:34:10 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[லைப் ஸ்டைல்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=482</guid>
		<description><![CDATA[இந்த பொண்ணுங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர் இன்றைய இளசுகள். இதையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு பெண்களின் மனதை கவரவும், அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்ளவும் ஆலேசானை கூறியுள்ளனர் நிபுணர்கள். பெண்களோட பேசப்போறதுக்கு முன்னாடி இளைஞர்களே இதப் படிச்சிட்டு போங்க. நேர்மையா இருங்க நேர்மையான ஆண்களை மட்டுமே பெண்களுக்குப் பிடிக்கிறதாம். எதற்கெடுத்தாலும் பொய்சொன்னால் உங்களுடன் பழகுவது ரிஸ்க் என்று &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-483" title="qualities-women-look-for" src="http://puthir.com/wp-content/uploads/2012/03/qualities-women-look-for.jpg" alt="" width="300" height="225" />இந்த பொண்ணுங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர் இன்றைய இளசுகள். இதையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு பெண்களின் மனதை கவரவும், அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்ளவும் ஆலேசானை கூறியுள்ளனர் நிபுணர்கள். <span id="more-482"></span>பெண்களோட பேசப்போறதுக்கு முன்னாடி இளைஞர்களே இதப் படிச்சிட்டு போங்க.</p>
<p><strong>நேர்மையா இருங்க</strong></p>
<p>நேர்மையான ஆண்களை மட்டுமே பெண்களுக்குப் பிடிக்கிறதாம். எதற்கெடுத்தாலும் பொய்சொன்னால் உங்களுடன் பழகுவது ரிஸ்க் என்று உங்கள் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டார்களாம்.</p>
<p><strong>நகைச்சுவை உணர்வு</strong></p>
<p>ஆண்களுக்கு நகைச்சுவை உணர்வு அவசியம். சிரிக்க சிரிக்க பேசும் ஆண்களையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம் உங்களின் பேச்சு ஆண்களை அப்படியே அட்ராக்ட் செய்யவேண்டும். அதேசமயம் நகைச்சுவை என்ற பெயரில் போரடித்துவிடக்கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.</p>
<p><strong>பாதுகாக்கும் தன்மை</strong></p>
<p>எந்த ஆணின் அருகில் இருக்கையில் பாதுகாப்பாக உணர்கின்றனரோ அந்த ஆண்தான் பெண்ணின் மனதை கவர்ந்தவன். அதனால்தான் எம்.ஜி.ஆர் காலத்திய திரைப்படங்களில் இருந்து இன்றைய தனுஷ் திரைப்படங்கள் வரை கதாநாயகன் நான்கு பேரிடம் சண்டை போட்டாவது கதாநாயகியை காப்பாற்றுவது போல காட்சி அமைக்கின்றனர் இயக்குநர்கள். எனவே பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுங்கள்.</p>
<p><strong>அழகும், அறிவும்</strong></p>
<p>ஆண்களுக்கு அழகு மட்டுமல்ல அறிவும் அவசியம் அது மாதிரியான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றராம். எனவே பெண்களுக்கு பிடித்தமாதிரி பேசவும் கற்றுக்கொள்வது அவசியம்.</p>
<p><strong>அன்பும், பாசமும்</strong></p>
<p>அதிக அன்போடும், பாச உணர்வோடும் இருக்கும் ஆண்களைத்தான் அதிகம் பிடிக்கிறதாம். வாழ்நாள் முழுதும் உன் கூட வருவேன் என்ற உறுதி மொழி தருவதோடு அதை கடைபிடிக்கும் ஆண்களை ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். எந்த காரணத்திற்காகவும் மனதை காயப்படுத்தாத ஆண்களைத்தான் அவர்கள் விரும்புகின்றனராம்.</p>
<p><strong>ஆரோக்கியம் அவசியம்</strong></p>
<p>உணவு, உடை, ஸ்டைல் என அனைத்திலுமே ஒரு தனித்தன்மை இருக்கட்டும். ஒரு ஹைஜீனிக் பெர்சனைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம். ஏதாவது சிறிய தவறு நேர்ந்தாலும் உடனடியாக மன்னிப்பு கேட்கும் ஆண்களை அவர்கள் நேசிக்கின்றனராம்.</p>
<p><strong>இடைவெளி அவசியம்</strong></p>
<p>எப்பவுமே கொஞ்சம் இடைவெளி விட்டுப்பேசும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம். அதேபோல் மரியாதையோடு பேசும் ஆண்களைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனராம்.</p>
<p><strong>நட்பான ஆண்கள்</strong></p>
<p>முதல்ல நட்பா பேசுங்க அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர். உங்களின் நட்பான அணுகுமுறை பெண்களின் மனதை கவரும்.</p>
<p><strong>ஓவரா சீன் போடாதீங்க</strong></p>
<p>பெண்களை கவர் பண்ண ஓவரா சீன் போடும் ஆண்களைக் கண்டாலே பெண்களுக்கு அலர்ஜியாம். எனவே எதையுமே அளவோடு செய்யுங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/03/482.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8216;படம்&#8217; பார்த்தால் சரியாக &#8216;கதை&#8217; சொல்ல முடியாது&#8230;!</title>
		<link>http://puthir.com/2012/03/478.html</link>
		<comments>http://puthir.com/2012/03/478.html#comments</comments>
		<pubDate>Sun, 25 Mar 2012 17:31:57 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[லைப் ஸ்டைல்]]></category>

		<guid isPermaLink="false">http://puthir.com/?p=478</guid>
		<description><![CDATA[ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட முடியாதாம். ஒரு ஆய்வு இப்படி எச்சரிக்கிறது. ஆண்கள்தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான செக்ஸ் நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகிறதாம். &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter size-full wp-image-479" title="porn-vid" src="http://puthir.com/wp-content/uploads/2012/03/porn-vid.jpg" alt="" width="300" height="225" />ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட முடியாதாம். ஒரு ஆய்வு இப்படி எச்சரிக்கிறது.<span id="more-478"></span></p>
<p>ஆண்கள்தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான செக்ஸ் நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகிறதாம்.</p>
<p>செக்ஸ் விஷயங்களை வீடியோவில் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நபர்களால் உண்மையில், நிஜமான செக்ஸ் விஷயங்களை முழுமையாக, சரியாக நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறதாம். இதனால் பல பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆளாவதாக இந்த ஆய்வுகூறுகிறது.</p>
<p>வீடியோவில் செக்ஸ் உறவுகளைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லையாம்.</p>
<p>இதற்கு முக்கியக் காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டி விடக் கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே. அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து கடைசியில், உண்மையான இன்பத்தை அனுபவிக்க நேரிடும்போது அதனால் பலன் இல்லாமல் போய் விடுகிறதாம்.</p>
<p>இப்படி ஆபாசப் படம் பார்த்து உண்மையான உற்சாகத்தையும், இன்பத்தையும் தொலைத்து நிற்கும் பலரும் தற்போது செக்ஸ் கவுன்சிலிங்குக்கு அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனராம்.</p>
<p>இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட் ஒருவர் கூறுகையில், ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இன்டர்நெட் மூலம் ஆபாசப் படம் பார்ப்போர் பெருமளவில் பெருகி விட்டனர். இதனால் உண்மையான செக்ஸ் நடவடிக்கைகளில் இவர்களால் ஈடுபடுவதில் பல சிரமங்களைச் சந்திக்கின்றனர்.</p>
<p>அதிக அளவிலான செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்த்துப் பார்த்து இவர்கள் மன ரீதியாக களைத்துப் போய் விடுகின்றனர். அதில் ஒரு சலிப்பும், அலுப்பும் வந்து விடுகிறது. டோபமைன்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.</p>
<p>இப்படிப்பட்ட செக்ஸ் பட அடிமைகள், படிப்படியாக ஆபாசப் படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லதாம். அதை நிறுத்த முடியாதவர்களுக்கு மருந்து, மாத்திரைகள், கவுன்சிலிங் போன்றவற்றைத் தருகிறார்களாம் செக்ஸாலஜிஸ்ட்டுகள்.</p>
<p>எனவே வாலிப வயோதிகர்களே, எப்போதும் நிழலை நம்பாதீர்கள், தேவைப்படும்போது நிஜத்தை நாடுவதே மன நலனுக்கும், உடல் நலனுக்கும் நல்லது&#8230;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://puthir.com/2012/03/478.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

